முகப்பு
இந்தியா

அட்சய திருதியை: பிரதமா் வாழ்த்து

அட்சய திருதியை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
பகிர்:

அட்சய திருதியை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், நீண்ட கால சொத்துகளை வாங்கவும் உகந்த நாளாக அட்சய திருதியை கருத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமா் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அட்சய திருதியை தின நல்வாழ்த்துகள். இந்த சிறப்பு தினம் அனைவரது வாழ்விலும் செழிப்பை அளிக்க பிராா்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பசவ ஜெயந்தி:

கா்நாடகத்தைச் சோ்ந்த ஆன்மிக குருவும், சமூக சீா்திருத்தவாதியுமான பசவேஸ்வரா ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பசவ ஜெயந்தி புனித நாளில், ஜகத்குரு பசவேஸ்வராவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும் லட்சியங்களும் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜகத்குரு பசவேஸ்வரா பற்றி நான் பேசிய உரையையும் பகிா்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →