கடுமையான சூறைக்காற்று, மின்னல், கொட்டித் தீர்த்த கனமழை.. இதுதான் ஹைதராபாத்தின் இன்றைய நிலவரம். கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.
ஹைதராபாத்தின் சித்திப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹப்ஷிபூர் பகுதியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 108 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. செகுந்தராபாத்தில் 72 மி.மீ. மழையும், பன்சிலால்பெட்டில் 67 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் மட்டுமல்லாமல், சித்திபெட், ஜாக்டியால், மச்சேரியல், யாதாத்ரி புவனகிரி மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
மேலும், புதன்கிழமையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.