அமராவதி: 10ஆம் வகுப்பு வினாத்த் தாள் முறைக்கேட்டு வழக்கில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் பி.நாராயணாவுக்கு சித்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
செவ்வாய்க்கிழமை அன்று இரவு ஹைதராபாத் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் பி.நாராயணா அவர்களை விசாரிக்க சித்தூர் போலீஸ் அழைத்துச் சென்றது.
மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டார். நாராயணா அமைப்பின் தாளாளர் பதவியில் இருந்து 2014லே விலகி விட்டதாக ஆதாரங்கள் காட்டப்பட்டதை தொடர்ந்து அவர்க்கு ஜாமீன் வழங்க நீதிபதி சம்மதித்தார்.
ஒரு லட்சம் ரூபாயுடன் 2 நபர்களின் பிணையத்துடன் மே 18க்குள் தருமாறு கால அவகாசம் வழங்கியது.
எதிர்க்கட்சியான தெலுங்கு தேசக்கட்சி இது அரசியல் ரீதியான பழிவாங்கல் என ஆளும் அரசினை குற்றம் சாற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.