முகப்பு
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப் படை வீரர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை வீரரை தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை வீரரை தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் தேவேந்திர ஷர்மா என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் இந்திய விமானப் படையின் தகவல்களை பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட தேவேந்திர ஷர்மா மனைவியின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதையும் தில்லி குற்றப்பிரிவுனர் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து, விமானப் படை வீரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.