இந்தியா

பாகிஸ்தானில் வேன்-டிரக் மோதல்: 12 பேர் பலி, 8 பேர் காயம்

DIN

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் 2 பயணிகள் வேன்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து தலைமைக் காவலர் உஸ்மான் திப்பு கூறுகையில், 

குஜ்ரன்வாலாவின் கோட் லதா பகுதிக்கு அருகில் ஹபிசாபாத் சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வேனிலிருந்த பயணிகள் சர்கோதாவில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றுவிட்டு குஜ்ரன்வாலாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி பயணிகள் வேன்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹபிசாபாத் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

விபத்து நடந்தவுடன் டிரக் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT