மொத்த விலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு
நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தின் விகிதம் 15.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தின் விகிதம் 15.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் விகிதமானது 10.74 சதவீதமாக இருந்த நிலையில், 4.34 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | திரிகோணமலையில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபட்ச?
மேலும், உணவுப் பொருள்கள், உணவல்லாத பொருள்கள், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் உள்ளிட்டவையின் விலை உயர்வே பணவீக்க உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மொத்த விலை பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், பிப்ரவரியில் 13.43 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.