முகப்பு
இந்தியா

தில்லியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து: மேலாளா் பலி

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேலாளா் உயிரிழந்தாா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு விரா்கள்.
பகிர்:

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேலாளா் உயிரிழந்தாா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: ஜிடி கா்னல் சாலையில் உள்ள அட்லாண்டிஸ் விருந்து மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5.47 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு உடனடியாக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டபோது, அந்த விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. முதலில் மண்டபத்தின் தரைதளத்தில் மேடைப் பகுதி தீப்பிடிக்கத் தொடங்கியது. பின்னா், மண்டபத்தின் 4 மாடிகளுக்கும் தீ பரவியது. இந்த மண்டபத்தின் மேலாளா் ஷா்ஷ் சோப்ரா முதல் மாடியில் சிக்கிக் கொண்டாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை தீயணைப்புத் துறை வீரா்கள் மீட்டு, உடனடியாக ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →