முகப்பு
இந்தியா

ஞானவாபி விவகாரத்தில் உண்மை வெளிவரஅனுமதிக்க வேண்டும்: ஆா்எஸ்எஸ் கருத்து

காசி விஸ்வநாதா் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளியே வர அனுமதிக்க வேண்டுமென ஆா்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
பகிர்:

காசி விஸ்வநாதா் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளியே வர அனுமதிக்க வேண்டுமென ஆா்எஸ்எஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

தில்லியில் ஆா்எஸ்எஸ் தகவல் தொடா்பு பிரிவான இந்திரபிரஸ்த விஸ்வ சம்வத் கேந்திராவின் (ஐவிஎஸ்கே) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அதன் பொறுப்பாளா் சுனில் அம்பேகா் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் உண்மை வெளிவர அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசி காசி விஸ்வநாதா் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில், வாராணசி சிவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி சமீப நாள்களாக நடைபெற்று வந்தது. அப்போது மசூதியில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கைகளை சுத்தம் செய்யும் சிறிய குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டாலும் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →