இந்தியா

சார்தாம் யாத்திரை: பக்தர்கள் உயிரிழப்பு 91 ஆக உயர்வு

உத்தரகண்ட்டில் இந்தாண்டு சார்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

உத்தரகண்ட்டில் இந்தாண்டு சார்தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

உத்தரகண்ட்டில் இந்தாண்டு மே 3ஆம் தேதி சார்தாம் யாத்திரை தொடங்கியது. யாத்திரையின் போது வழியிலேயே இதுவரை மொத்தம் 91 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து உத்தரகண்ட் பொதுச் சுகாதார இயக்குனர் மருத்துவர் ஷைலஜா பட் கூறுகையில், 

சார்தாம் யாத்திரை தொடங்கியதிலிருந்து, இதுவரை 91 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு பெரும்பாலும் மாரடைப்பு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். 

முன்பு இருந்ததைவிட சார்தாமில் சுகாதார சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 169 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 6-ம் தேதி கேதார்நாத் கோயிலும், மே 8-ம் தேதி பத்ரிநாத் கோயிலின் நடையும் திறக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT