இந்தியா

ஒடிசாவில் பாம்பு கடித்து சிங்கம் உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

DIN

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

ஒடிசா மாநிலம், நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவில் 15 வயது மதிக்கத்தக்க பெண் சிங்கம் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சிங்கத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிங்கம் இன்று உயிரிழந்தது. சிங்கம் வசித்த தண்ணீர் அருந்தும் தொட்டி அருகே விஷப் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதாகவும் எனவே பாம்பு கடித்து சிங்கம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

எனினும், சிங்கத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் சிங்கம் 2015ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT