இந்தியா

ஒடிசாவில் பாம்பு கடித்து சிங்கம் உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

DIN

ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது. 

ஒடிசா மாநிலம், நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவில் 15 வயது மதிக்கத்தக்க பெண் சிங்கம் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சிங்கத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிங்கம் இன்று உயிரிழந்தது. சிங்கம் வசித்த தண்ணீர் அருந்தும் தொட்டி அருகே விஷப் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதாகவும் எனவே பாம்பு கடித்து சிங்கம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

எனினும், சிங்கத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் சிங்கம் 2015ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT