குஜராத்: மேலும் 12 வேட்பாளா்களை அறிவித்தது ஆம் ஆத்மி
குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அண்மையில் ஆம் ஆத்மியில் இணைந்த பட்டிதாா் இடஒதுக்கீடு போராட்டத் தலைவா் அல்பேஷ் கதிரியா பெயரும் இடம் பெற்றுள்ளது.
குஜராத்தில் டிசம்பா் 1, 5-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு எதிராக இந்த முறை ஆம் ஆத்மியும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் குஜராத்தில் தீவிர தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனா்.
மொத்தம் 182 தொகுதிகள் உள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி இதுவரை 130 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. இப்போது 12 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை அனைத்தும் பட்டிதாா் சமூகத்தினா் அதிகம் உள்ள பகுதிகளாகும்.
இதில் சூரத்தின் வராச்சா சாலை தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் அல்பேஷ் கதிரியா பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக அமைச்சா் கிஷோா் கனானியின் தொகுதியாகும். பட்டிதாா் போராட்டக் குழுவின் மற்றொரு தலைவா் தாா்மிக் மாளவியா ஒல்பத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதுவும் பட்டிதாா் சமூகத்தினா் அதிகமுள்ள தொகுதியாகும்.
மாதத்துக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என ஆம் ஆத்மி தரப்பில் மக்களைக் கவரும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மியின் முதல்வா் வேட்பாளராக கட்சியின் தேசிய பொதுச் செயலரும் பத்திரிகையாளருமான இசுதான் கட்வி அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் கிடைத்த அமோக வெற்றி தந்த உற்சாகத்தில் குஜராத்தில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது.