இந்தியா

பிலாஸ்பூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார் ஜெ.பி.நட்டா! 

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிலாஸ்பூரில் உள்ள விஜப்பூரில் வாக்களித்தார். 

ANI

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிலாஸ்பூரில் உள்ள விஜப்பூரில் வாக்களித்தார். 

வாக்களித்த பின்னர் நட்டா கூறுகையில், 

ஹிமாச்சலில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

மக்களுக்கு வைராக்கியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த வைராக்கியம் ஏதோவொன்றின் மீது உள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

நட்டாவின் மனைவி மல்லிகா நட்டாவுக்கு அவருடன் சேர்ந்து வாக்களித்தார். 

பாஜக கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீடு பிலாஸ்பூரில் உள்ளதால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு முக்கியமானது. 

68 தொகுதிகள் கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரேகட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. 

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT