இனி 'ட்ரூ காலர்' தேவையில்லை: ஏன் தெரியுமா?
எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது.
தொலைபேசிக்கு அழைக்கும் நபரின் பெயர் திரையில் தெரியும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது அழைப்பவரின் பெயர், நமது தொலைபேசியில் இல்லாவிட்டாலும் அவரது பெயர் தெரியும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
தற்போது நமது தொலைபேசிக்கு அழைப்பவர் பெயரை 'ட்ரூ காலர்' போன்ற செயலிகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், 'ட்ரூ காலர்' போன்ற செயலிகளுக்கு தேவை இருக்காது.
Advertisement
Advertisement
பயனர்களிடம் இருந்து பெறப்படும் கேஒய்சி தகவல்களின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளின் போது பெயருடன் திரையில் காண முடியும். இதை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.