இந்தியா

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புப்படுத்தக்கூடாது: அமித்ஷா

பயங்கரவாதத்தை விடப் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

DIN

பயங்கரவாதத்தை விடப் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறுகையில், 

பயங்கரவாதிகள் தொடர்ந்து வன்முறையை நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிர மயமாக்குவதற்கும், நிதி ஆதாரங்களை உயர்த்துவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருவதாகவும், தீவிரவாதத்தைப் பரப்பவும் தங்கள் அடையாளங்களை மறைக்கவும் டார்க்நெட் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். 

பயங்கரவாதம், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். 

ஆனால், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட மிகவும் ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் பயங்கரவாதத்தின் வழிகள் மற்றும் முறைகள் அத்தகைய நிதியிலிருந்து வளர்க்கப்படுகின்றன. 

மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது உலக நாடுகளில் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துகிறது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதம், தேசியம் அல்லது குழுவுடன் இணைக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று அவர் கூறினார். 

பாகிஸ்தான் மீதான மறைமுகத் தாக்குதலில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த தடுக்கும் நாடுகளும் உள்ளன என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT