இந்தியா

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது: 2 தொழிலாளர்கள் பலி

DIN

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். 

பிகார் மாநிலம், நாளந்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இன்று திடீரென இடிந்தது. இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண் குமார், "பாலத்தின் மேல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

எத்தனை பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை" என்றார். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT