இந்தியா

நாகாலாந்து: சிறைக் கதவை உடைத்து 9 கைதிகள் தப்பியோட்டம்

DIN

நாகாலாந்தில் 9 சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து நேற்று கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். தப்பியோடிய 9 கைதிகளில் இரண்டு பேர் தண்டனை பெற்றவர்கள் மற்றும் 7 பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். சிறையில் இருந்து இரும்பு கதவு மற்றும் கைவிலங்கு பூட்டு சங்கிலியை உடைத்துக்கொண்டு அவர்கள் தப்பினர். 

இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மோன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி அபோங் யிம் கூறுகையில், சனிக்கிழமை அதிகாலையில் மோன் மாவட்ட சிறைச்சாலையின் 9 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. 9 சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் நாகாலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT