இந்தியா

அசாமில் பயங்கர தீ விபத்து! 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

DIN

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் லஹோரிஜன் பகுதியில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அசாம் - நாகலாந்து எல்லையில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 100 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. 

விபத்து நடந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த தீ விபத்தில் அருகில் இருந்த குடிசைகள் எரிந்து நாசமானதாகவும் தீயை விரைந்து அணைத்துவிட்டதாகவும் கர்பி அங்லாங்கின் காவல் கண்காணிப்பாளர் சஞ்சிப் குமார் சைகியா கூறினார்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT