கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர்.
நடப்பாண்டு கார்த்திகை மாதம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து, சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
சபரிமலையில் கடந்த 6 நாள்களில் மட்டும் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கார்த்திகை மாதத் தொடக்கம் என்பதாலும், அடுத்தடுத்த நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.