முகப்பு
இந்தியா

குறையும் கரோனா! நாட்டில் புதிதாக 3,805 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,655 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் 5,069 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 38,293-ஆக குறைந்துள்ளது. இதுவரையில் 4,40,24,164 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,29137 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 218.68 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.