இந்தியா

வேகமான வளர்ச்சியில் யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை

DIN

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இணையவழியில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சிரமம் ஏற்பட்ட போதிலும் தற்போது அனைவரின் பயன்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தேசிய பரிவர்த்தனை கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் கையாளப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10.73 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி  பரிவர்த்தனையாக அதிகரித்துள்ளது.

இது ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 3 சதவிகிதம் அதிகம். கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் இதுவே ரூ.657 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT