இந்தியா

உ.பி.: சிஏஏவுக்கு எதிராகப் போராடிய 60 பேருக்குக் காவல் துறை நோட்டீஸ்

DIN

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோா் மாவட்டம் நடெளா் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 60 போ் ரூ.57 லட்சம் செலுத்த காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக நடெளா் காவல் துறை அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி நடெளரில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அரசுச் சொத்தை சேதப்படுத்தி, காவல் துறை வாகனத்துக்குத் தீ வைத்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரையும் தாக்கினா். இதையடுத்து தற்காப்புக்காக காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், போராட்டத்தின்போது ஏற்படுத்திய சேதங்களுக்காக ரூ.57 லட்சம் செலுத்த வலியுறுத்தி 60 போராட்டக்காரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

SCROLL FOR NEXT