இந்தியா

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் ராகுல் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

DIN

கர்நாடகத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

ராகுல் காந்தி சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். 

கோயிலுக்குச் சென்ற பிறகு ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மத நல்லிணக்கம் இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம் என்றார்.  

ராகுல் தனது 26வது நாள் யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். மேலும் 10 நாள் தசரா கொண்டாட்டங்களுக்காக அலங்கரிக்கப்பட்ட நகரத்தின் தெருக்களில் நடந்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், மேலும் அவர் நனைந்த நிலையிலும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எஸ்.வி., முதல் அனிருத் வரை : விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு!

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றிவந்து வழிபட்ட நாய்!

SCROLL FOR NEXT