இந்தியா

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் ராகுல் வழிபாடு!

DIN

கர்நாடகத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

ராகுல் காந்தி சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். 

கோயிலுக்குச் சென்ற பிறகு ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மத நல்லிணக்கம் இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம் என்றார்.  

ராகுல் தனது 26வது நாள் யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். மேலும் 10 நாள் தசரா கொண்டாட்டங்களுக்காக அலங்கரிக்கப்பட்ட நகரத்தின் தெருக்களில் நடந்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், மேலும் அவர் நனைந்த நிலையிலும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT