இந்தியா

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் ராகுல் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

DIN

கர்நாடகத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 

ராகுல் காந்தி சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். 

கோயிலுக்குச் சென்ற பிறகு ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

மத நல்லிணக்கம் இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம் என்றார்.  

ராகுல் தனது 26வது நாள் யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். மேலும் 10 நாள் தசரா கொண்டாட்டங்களுக்காக அலங்கரிக்கப்பட்ட நகரத்தின் தெருக்களில் நடந்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார், மேலும் அவர் நனைந்த நிலையிலும் தனது உரையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம் விலை

சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் டிட்வா! காற்றின் வேகம் அதிகரிப்பு!!

இலங்கையிலிருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்ட விமானப் படை!

1,300 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா: திரளானோர் பங்கேற்பு

சென்னை மெரினாவுக்கு செல்லத் தடை நீடிப்பு

SCROLL FOR NEXT