இந்தியா

மைசூரில் சோனியா காந்தி

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கா்நாடகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மைசூருக்கு திங்கள்கிழமை வந்தாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இப்போது கா்நாடகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி வந்துள்ளாா்.

மைசூரில் தசரா பண்டிகையும் இப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் இருநாள்கள் ஓய்வுக்குப் பிறகு வியாழக்கிழமை (அக்.6) மீண்டும் தொடங்குகிறது. அப்போது சோனியா காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்க இருக்கிறாா்.

உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபகாலமாக எந்த அரசியல் நிகழ்விலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தாா். இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன் காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT