தில்லி எய்ம்ஸ் (கோப்புப்படம்) 
இந்தியா

எய்ம்ஸ் புறநோயாளிகளின் கவலையைப் போக்க புதிய வசதிகள்

புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

PTI

புது தில்லி: புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே ஊழியர்கள் வேலை செய்வதால், புறநோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்டோபர் 16ஆம் தேதி முதல், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக வைத்த வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதலாக 50 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதுபோல, அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கேயே நுழைவுப் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT