இந்தியா

ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி

DIN

விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தொண்டர்கள் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற 'பாத் சஞ்சலன்' பேரணியில் பங்கேற்றனர்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இந்த பேரணி ஜெய்ப்பூரில் உள்ள பார்கோட் உள்பட சுமார் 29 இடங்களில் புதன்கிழமை காலை தொடங்கியது. இந்த பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஆயுத பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சீருடையில் தொண்டர்கள் யோகா, சூரிய நமஸ்காரம் போன்றவற்றின் விளக்கங்களை செய்து காண்பித்தனர். தீவிரவாதம் மற்றும் பிற தேச விரோத சக்திகளை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஜெய்ப்பூர் நகரின் வெவ்வேறு பகுதிகளில்  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT