இந்தியா

திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது: அறிவித்தார் நித்யானந்தா

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் நித்யானந்தா.

DIN


திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் நித்யானந்தா.

பாலியல் புகார், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வரும் நித்யானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி, தீவு ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி வங்கி, பாஸ்போர்ட் என பலவற்றையும் அறிவித்தார்.

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, நாள்தோறும் ஆன்லைன் மூலமாக தனது பின்தொடர்வோருக்கு சொற்பொழிவுகள் ஆற்றி வந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

ஒரு நாள் அவர் இறந்தே விட்டார் என்று கூட செய்திகள் வந்தன. பிறகு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றன செய்திகள். ஆனால், நான் சாகவில்லை. சமாதியில்தான் இருக்கிறேன் என்றார் அவரே.

அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் உதவுமாறு இலங்கைக்கு நித்யானந்தா கடிதம் எழுதியிருப்பதாகவும் கூட செய்திகள் வந்தன.

இதையெல்லாம் தாண்டி, தற்போது நித்யானந்தாவின் விடியோ ஒன்றை திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா பகிர்ந்துள்ளார். அண்மையில்தான் சூர்யா சிவா திமுகவிலிருந்து விலகி பாஜகவில்இணைந்தார்.

அந்த விடியோவில், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்யானந்தாவே அறிவித்துள்ளார்.

இந்த விடியோவை பகிர்ந்திருக்கும் திருச்சி சூர்யா சிவா, சுவாமி நித்யானந்தாவால் கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

திருக்கழுக்குன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஒன்றியக்குழு உறுப்பினா் தா்னா போராட்டம்

SCROLL FOR NEXT