இந்தியா

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி மோதியதில் 11 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 

DIN

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 

நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து ஒன்று லாரி மோதி விபத்திற்கு உள்ளானது இதில் 11 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் ஒளரங்காபாத் சாலையில் சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று, லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.  

இதனால் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் திணறினர். பின்னர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் வந்து தீயை அணைத்து பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பயணிகள் தீயில் சிக்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT