இந்தியா

சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா

சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா  நடந்து வருகிறது.

DIN

சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா  நடந்து வருகிறது.

இந்திய விமானப்படை இன்று(சனிக்கிழமை) 90 ஆண்டுகளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பஞ்சாபின் சண்டீகரில் இசைக்குழு அணிவகுப்புடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி, விமானப்படை தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய விமானப் படைத் தலைவர் விவேக் ராம் சவுதாரி கூறுகையில், "எங்கள் முன்னோடிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையால் பெறப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பெற்றுள்ளோம். விமானப்படையில் பணிபுரிந்த வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் உரிமை நமக்கு உள்ளது. விமானப்படையின் நூற்றாண்டு நிறைவு விழா இன்னும் பத்தாண்டுகளில் நடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது".

"அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை சேர்ப்பது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால் அதைவிட முக்கியமாக, இந்தியாவில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் சேவையில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க:

இந்திய விமானப்படை வீரர்களுக்கான சீருடையை மாற்றி விமானப்படைத் தலைவர் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT