இந்தியா

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெயர் பெற்றவர் யாதவ்: சுக்பீர் பாதல்!

DIN

சமாஜ்வாதியின் தேசபக்தர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் திங்கள்கிழமை காலை காலமானார்.

தேசம் ஒரு பெரியவரை இழந்துவிட்டது. அவர் ஒரு சோசலிச சின்னம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெயர் பெற்றவர். சமாஜ்வாதி குடும்பத்துக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்று பாதல் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

சமாஜ்வாதி தேசபக்தரின் உடல் திங்கள்கிழமை பிற்பகுதியில் எட்டாவாவில் உள்ள அவரது சொந்த கிராமமான செஃபாய்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

மறைந்த மூத்த தலைவரின் உடல் தகனம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது கிராமத்தில் நடைபெறும் என்று சமாஜ்வாதி கட்சி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT