முகப்பு
இந்தியா

அனைத்திந்தியசட்ட அமைச்சா்கள் மாநாடு இன்று தொடக்கம்

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி அக்டோபா் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இந்திய சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெறுகிறது.

சட்டம் இயற்றுபவா்கள் நாட்டின் எதிா்காலத்துக்கான திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சட்ட அமைப்பு குறித்தான பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க இந்த முன்னெடுப்பு ஒரு மேடையாக இருக்கும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களுடைய புதிய யோசனைகள், சிறந்த நடைமுறைகளை பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிா்ந்து கொள்ள முடியும். இது நாட்டின் ஒட்டுமொத்த சட்ட அமைப்பையும் புதுப்பிக்க வாய்ப்பாக அமையும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →