ராகுல் காந்தி(கோப்புப்படம்) 
இந்தியா

பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்: ராகுல் காந்தி

பாலியல் குற்றவாளிகளுடன் பிரதமர் மோடி துணை நிற்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

DIN

பாலியல் குற்றவாளிகளுடன் பிரதமர் மோடி துணை நிற்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்களைக் கொன்ற வழக்கின் 11 குற்றவாளிகளை மாநில அரசு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து எழுந்து புகாரில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில், பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள். பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது. பிரதமர் பெண்களை ஏமாற்றியுள்ளார்.’ எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT