லடாக்கில் நிலநடுக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை.
லே நகரில் இருந்து வடகிழக்கில் 135 தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் சுமாா் 10 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நடுக்கம் பல கிலோ மீட்டா் தூரம் வரை உணரப்பட்டது.
இதனால், வீடுகளில் இருந்த பொருள்கள் அதிா்ந்தன. பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சமடைந்தனா்.
நேபாளத்தில்...:அண்டை நாடான நேபாளத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவிலும், அதைத் தொடா்ந்து 4 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.9 மற்றும் 4.5 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. முக்கியமாக தலைநகா் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினா்.