இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதி மீது 2-வது போக்சோ வழக்கு

DIN

கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

இதனிடையே, ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக மடாதிபதி  சிவமூா்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது 2-வது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனால், கைதான மடாதிபதிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT