இந்தியா

பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை: மத்திய அரசு 

நடப்பு பண்டிகைக் காலத்தில் பருப்பு மற்றும் வெங்காயத்தின் விலை உயராது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

DIN

நடப்பு பண்டிகைக் காலத்தில் பருப்பு மற்றும் வெங்காயத்தின் விலை உயராது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

நேற்று(அக்.20) புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், நாட்டில் வெங்காயம் மற்றும் பருப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.

43 லட்சம் டன் பருப்புகளும், 2.5 லட்சம் டன் வெங்காயமும் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். தக்காளி விலை குறித்து ரோஹித், இது மிகவும் கெட்டுப்போகும் பொருள் என்பதால், அதன் விலை உள்ளூர் மதிப்பு உள்பட பல காரணிகளைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக தள்ளுபடி விலையில் இந்த மையம் பருப்பு வகைகளை வழங்குகிறது என்று செயலாளர் மேலும் கூறினார். 

பருப்பு விநியோகம் தொடர்பாக மாநிலங்களுடன் தொடர்ந்து கணகானிப்பில் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT