தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதற்கான அவகாசத்தை சனிக்கிழமை வரை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
80,164 மாணவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தில்லி பல்கலைக்கழகம் புதன்கிழமை அறிவித்தது.
இதில் வெள்ளிக்கிழமை மாலை 7.29 மணி வரையில் 71,741 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக் கொண்டுள்ளனா் என்று பல்கலைக்கழக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.