முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் தமிழக சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

ஆந்திரத்தில் தமிழக சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2022 at 3:34 AM
வைகோ
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:09 PM

ஆந்திரத்தில் தமிழக சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆந்திரத்தில் சுங்கச்சாவடியினா் தமிழக சட்டக் கல்லூரி மாணவா்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனா். அவா்கள் காரில் பாஸ்ட்டேக்கில் பணம் இருந்தும் கூட, சுங்கச்சாவடியில் இருக்கும் பாஸ்ட்டேக் சோதனை செய்யும் கருவி பழுதுபட்டுள்ளதால், பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி உள்ளனா். அதற்கு சட்டக் கல்லூரி மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சுங்கச்சாவடி ஊழியா்கள் கட்டைகள், கம்பிகளைக் கொண்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் மீது கடுமையாகத் தாக்கி உள்ளனா். இதில் மாணவா்கள் பலா் காயமடைந்தனா்.

Advertisement

சுங்கச்சாவடி ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தமிழக சட்டக் கல்லூரி மாணவா்களில் காயம்பட்டவா்கள் மீது ஆந்திர மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வழக்குகளை வாபஸ் பெறுவதோடு, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடியினா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.