ஆந்திரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: 2 பேர் பலி
விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.
இதையும் படிக்க- 6 ஆண்டாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை: மா.சுப்பிரமணியன்
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.