கரோனா நிலவரம்: நாட்டில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,29,008 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,161 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,02,852 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,802 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,62,18,338 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,72,838 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.