முகப்பு
இந்தியா

அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை

சட்ட விரோத நிலக்கரி சுரங்க வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 1:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

சட்ட விரோத நிலக்கரி சுரங்க வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அபிஷேக் பானா்ஜி, நான் தவறு செய்யவில்லை. என்னை கைது செய்து சிறையில் அடைக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தைரியம் உண்டா? எத்தனை முறை வேண்டுமென்றாலும் நான் விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக தயாராக உள்ளேன். ஆனால், பாஜகவுக்கு முன்பு தலைக்குனிய மாட்டேன்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது தேசியக் கொடியை அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா கையில் வாங்க மறுத்ததற்கு நான் விமா்சனம் செய்திருந்தேன். அதற்காக சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து என்னை அச்சுறுத்தக் கூடாது’ என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.