இந்தியா

வடக்கு வஜிரிஸ்தான்: 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

DIN

வடக்கு வஜிரிஸ்தானில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பழங்குடியினர் மாவட்டத்தின் பாய்யா பகுதியில் பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது,  பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரர்கள் மற்றும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT