கோப்புப்படம் 
இந்தியா

இந்தியா - பாக். வீரர்கள் எல்லையில் துப்பாக்கிச் சண்டை

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியான ஆர்னியாவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக ஜம்மு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்களுக்கு காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT