gold041130 
இந்தியா

இந்தூரில் ரூ.3.72 கோடி வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல்: 3 பேர் கைது

இந்தூர் அருகே காரில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

PTI

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே காரில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

உளவுத்துறைக்கு வந்த தகவலின்படி, ஆகஸ்ட் 30 அன்று இந்தூர் அருகே மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் 2 பயணிகளுடன் வந்த காரை  மறித்து சோதனை செய்தபோது 7.1 கிலோ எடையுள்ள வெளிநாட்டு தங்கம் 8 கட்டிகள் இருப்பது தெரியவந்தது. 

காரில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இருவருக்கு தங்கக் கட்டிகளை சப்ளை செய்ததாகக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த மேலும் ஒரு சிண்டிகேட் உறுப்பினரை டிஆர்ஐ கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினார்.

தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT