தில்லியில் இந்திய கம்யூ.(எம்எல்) தலைவர் பட்டாச்சார்யாவை சந்தித்தார் நிதிஷ்குமார்
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவை புதன்கிழமை சந்தித்தார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவை புதன்கிழமை சந்தித்தார்.
நிதிஷ் குமார் நான்கு நாள் பயணமாகத் தலைநகர் தில்லிக்கு வந்துள்ளார்.
இதனிடையே, 2024 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இணைந்து போராடுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
Advertisement
Advertisement
அவர் செவ்வாய்க்கிழமை இடதுசாரி தலைவர்களான சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா ஆகியோரை சந்தித்தார்.
பிகார் சட்டப்பேரவையில் 16 இடதுசாரி கட்சிகளின் எல்எல்ஏக்கள் நிதிஷ் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.