முகப்பு
இந்தியா

ஓணம் பண்டிகை பிரதமா் வாழ்த்து

 ஓணம் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

 ஓணம் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும், குறிப்பாக கேரள மாநில மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள். இந்த பண்டிகை, இயற்கை அன்னையின் முக்கிய பங்கு, கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணா்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.