மாயாவதி 
இந்தியா

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுங்கள்: மாயாவதி

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

PTI

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

கரும்பு நிலுவைத் தொகை மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் உத்தரப் பிரதேச விவசாயிகள் ஏற்கனவே துயரத்தில் உள்ளனர். 

தற்போது பருவமழை பொய்த்ததால் மேலும் கவலை அதிகரித்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடத் தலைவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை மீட்க அரசு உடனடியாக உதவ வேண்டும். இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையாகும்.

மற்றுமொரு டிவிட்டர் பதிவில், உத்தரப் பிரதேசம் போன்ற மிகப்பெரிய விவசாயிகள் கொண்ட மாநிலத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.192 கோடி செலவழிக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.38 கோடி மட்டுமே பயிர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்குச் செலவழிக்கப்படுகிறது. இவற்றைப் புறக்கணிப்பதை அரசு நிறுத்த வேண்டும். 

உத்தரப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 62 மாவட்டங்கள் இந்த பருவத்தில் குறைவான மழையைப் பெற்றுள்ளன, மேலும் நிலத்தடி யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு மாநில அரசு ஒரு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT