இந்தியா

நாய் கடித்த சிறுவனுக்கு 150 தையலா? உ.பி.யில் பரிதாபம்!

ANI

உத்தரப் பிரதேசத்தில் நாய் ஒன்று 10 வயது சிறுவனைக் கடித்துக் குதறியதில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஜியாபாத்தில், சஞ்சய் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குச் சுற்றித் திரிந்த பிட்புல் நாய் ஒன்று 10 வயது சிறுவனைத் தாக்கத் தொடங்கியது. 

இதில் அலறியடித்துத் தப்பித்த சிறுவனை விடாமல் துரத்தித் துரத்தி அந்த கடித்துக் குதறியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர், மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனின் முகத்தில் 175 தையல்கள் போடப்பட்டுள்ளன. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக மாநகராட்சி ரூ.5,000 அபராதம் விதித்தது. 

இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் காஜியாபாத்தில் நிகழ்ந்தது. வீட்டின்  லிப்டில் உரிமையாளருடன் வந்த நாய், அதே லிப்டில் வந்த சிறுவனைக் கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT