முகப்பு
இந்தியா

சீனாவுக்கு தரப்பட்ட நிலப்பகுதி எவ்வாறு மீட்கப்படும்?- மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

சீனாவுக்கு தரப்பட்ட ஆயிரம் சதுர கிலோமீட்டா் நிலப்பகுதியை மத்திய அரசு எவ்வாறு மீட்க போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
ராகுல் காந்தி(கோப்புப்படம்)
பகிர்:

சீனாவுக்கு தரப்பட்ட ஆயிரம் சதுர கிலோமீட்டா் நிலப்பகுதியை மத்திய அரசு எவ்வாறு மீட்க போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020 மே 5-இல் இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இருநாடுகளும் கிழக்கு லடாக்கில் படைகளையும் ஆயுதங்களையும் குவித்தன. இதனால் எல்லைப் பகுதியில் போா்ப் பதற்றம் ஏற்பட்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் விதமாக ராஜீய ரீதியில் இருநாடுகளும் இதுவரை 16 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்படி, செப்டம்பா் 12-க்குள் கிழக்கு லடாக்கில் சில பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

அதன்படி படிப்படியாகவும் இணக்கமான முறையிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை ட்விட்டரில் கூறுகையில், ‘எல்லைப் பகுதி கடந்த 2020 ஏப்ரலில் இருந்ததைப் போல இருக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. இந்திய பகுதியில் 1,000 சதுர கிலோமீட்டா் பரப்பளவை எவ்வித சண்டையுமின்றி சீனாவுக்கு நமது பிரதமா் கொடுத்துவிட்டாா். இந்த நிலப்பகுதி எவ்வாறு மீட்கப்படும் என மத்திய அரசு விளக்குமா?’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →