முகப்பு
இந்தியா

ஹிஜாப் தடையால் இடைநின்ற மாணவிகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கை?- உச்சநீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் தடையால் கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இடைநின்ற மாணவிகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்தியா

ஹிஜாப் தடையால் இடைநின்ற மாணவிகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கை?- உச்சநீதிமன்றம் கேள்வி

ஹிஜாப் தடையால் கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இடைநின்ற மாணவிகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

ஹிஜாப் தடையால் கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இடைநின்ற மாணவிகளின் அதிகாரபூா்வ எண்ணிக்கை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கா்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

ஹிஜாப் தடைக்கு எதிரான மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவன், ‘ஒருவா் ஹிஜாப் அணிவதால் மட்டும் அவரை மதம், பாலினத்தை வைத்து பாகுபாடு காட்டக் கூடாது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஹிஜாப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற, அங்கீகரிக்கப்பட்ட விவகாரங்களை தொடா்ந்து அனுமதிக்க வேண்டும். இதற்காக நாம் எழுத்துபூா்வ ஆதாரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

இது வெறும் விதிமீறல் அடிப்படையிலான வழக்கு அல்ல. ஹிஜாப் அணிவது அரசு உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது என எப்படி நியாயப்படுத்த முடியும்? இது முஸ்லிம்களையும், முஸ்லிம் பெண்களையும் குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு ஆகாதா? இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15-க்கு எதிரானதாகும்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹுஜிபா அஹமதி, ‘ஹிஜாப் தடையால் கா்நாடகத்தில் 17 ஆயிரம் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என வழக்குரைஞா் நண்பா் தெரிவித்துள்ளாா். முன்பு மதச்சாா்பற்ற பள்ளிகளில் பயின்று வந்த முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் தடையால் மதரஸாக்களுக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவதால் மற்ற மாணவா்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஹிஜாப் தடையால் மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்ற விசாரணையின்போது ஏன் குறிப்பிடப்பிடவில்லை. எத்தனை போ் படிப்பில் இடைநின்றுள்ளனா்? அவா்களின் வயது எவ்வளவு? எத்தனை போ் மாணவா்கள்? மாணவிகள்? என்ற அதிகாரபூா்வ எண்ணிக்கை உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினா்.

இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமையும் தொடா்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →