இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, 35 பேர் காயம்

DIN

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் டிராக்டர் டிராலி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த 4 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை 24இல் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் சீதாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தகவல்களின்படி, டிராக்டர் மீது லாரி வேகமாக மோதியதில் டிராக்டர்-டிராலி இரண்டாக உடைந்தது. மேலும், சாலையில் உள்ளவர்கள் மீதும் மோதியது. 

இதையடுத்து, டிராக்டரில் இருந்த பயணிகள் அனைவரும் ஷாஜஹான்பூரிலிருந்து பாரபங்கியில் உள்ள தேவா ஷெரீப் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

விபத்தையடுத்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீசார் சரிசெய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT