இந்தியா

ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

 ராஜஸ்தானில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுமி, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

DIN

 ராஜஸ்தானில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுமி, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், டெளசா மாவட்டம் அபனேரியை அடுத்த ஜஸ்ஸா பாடா கிராமத்தைச் சோ்ந்த அங்கிதா (2) வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தாா். சுமாா் 60 முதல் 70 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டாா்.

தகவலறிந்த போலீஸாரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுமியின் உடல்நிலை சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டது. குழாய் வழியாக ஆக்சிஜனும் விநியோகிக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு அருகே உள்ள பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சிறுமியை போலீஸாரும், பேரிடா் மீட்புப் படையினரும் பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT